ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
என் கணவர் கார்த்தியை உண்மையாக காதலித்தேன், ஆனால் அவர் என்னிடம் உண்மையாக இல்லை என்று கதறுகிறார் நடிகை மைனா நந்தினி.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‛சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்ற கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை நந்தினி. இவர் சென்னையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கார்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி எட்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில் கார்த்தி சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது சின்னத்திரை உலகினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பாக கார்த்தி, தனது தற்கொலைக்கு காரணம் தனது மாமனார் தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் நந்தினி அளித்துள்ள பேட்டியில் கார்த்தியின் தற்கொலை குறித்து பேசியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது... கார்த்தி இப்படி செய்வார் என்று நினைக்கவில்லை. மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக சொல்லி நிறையபேரிடம் பணம் வாங்கியிருக்கிறார். ஆனால் சொன்னபடி வேலை வாங்கி தரவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு தொந்தரவு செய்தனர். இதுதொடர்பாக நான் அவரிடம் சண்டை போட்டேன். நான் தற்கொலை செய்ய போகிறேன் என்று அடிக்கடி கூறி வந்தார். இதனால் எங்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு நான் என் அம்மா வீட்டிற்கு வந்துவிட்டேன்.
கார்த்திக்கு ஏற்கனவே ஒரு பெண்ணோடு தொடர்பு இருந்து, அவர் தற்கொலை செய்துவிட்டார். இதற்காக அவரை போலீசார் கைது செய்தனர். ஆனால் கார்த்தி துபாய் போய் உள்ளார் என்று சொல்லி வீட்டில் சமாளித்தேன். இது என் வீட்டில் இருப்பவர்களுக்கு கூட தெரியாது. எனக்கு நகைப் போடப்போறேன்னு சொல்லி, எங்ககிட்ட 20 லட்சம் வரைக்கும் பணம் வாங்கியுள்ளார், இதுவரை எந்த நகையும் போடல. கார்த்தி என்னை விட என் பணத்தை தான் விரும்பியிருக்கிறார். என்னோட நகைகள் அனைத்தையும் அடமானம் வைத்துவிட்டார்.
பணம் கொடுத்தவர்கள் எல்லோரும் பணத்தை கேட்டு நெருக்கடி தந்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்தார். அவருக்கு அறுதல் சொல்லி வந்தேன். பிரச்னையெல்லாம் தீர்த்துவிட்டு வா சேர்ந்து வாழலாம் என்று சொல்லியிருந்தேன். அவர் தப்பானவர் என்று தெரிந்தும் நான் போலீஸில் புகார் அளிக்கவில்லை. ஏனென்றால் நான் கார்த்தியை உண்மையாகவே காதலிக்கிறேன், என்னோட காதல் உண்மையானது. இரண்டு பேரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று ராத்திரி, பகலாக உழைத்து வந்தேன். ஆனால் கார்த்தி இப்படி செய்வார் என்று நினைத்து கூட பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.