இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழ் சினிமாவின் எவர்கிரீன் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா. ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துவிட்ட இளையராஜாவுக்கு தமிழ் சினிமா சார்பில் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மற்றும் நிர்வாகிகள், இசைஞானி இளையராஜாவை பிரசாத் ஸ்டுடியோவில் சந்தித்து பேசினர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் விஷால் பேசியதாவது... ‛‛வாழ்க்கையிலேயே சந்தோஷமான நிகழ்வு இது. இளையராஜாவோடு நாங்கள் இருந்த அரை மணி நேரம் மேலும் ஒரு வருடம் நாங்கள் வேகமாக உழைக்க புதிய உத்வேகத்தை தந்துள்ளது. இளையராஜாவை கவுரவிக்கும் வகையில் பாராட்டு விழா நடத்தி சமர்ப்பணம் செய்ய உள்ளோம். இது சாதாரணமான பாராட்டு விழாவாக இருக்காது, இந்திய சினிமாவே நடத்தும் பாராட்டு விழாவாக, இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய பாராட்டு விழாவாக இது இருக்கும்.
இந்த பாராட்டு விழா சென்னையில் தான் நடக்கும். சென்னையில் நடப்பது சென்னை மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். ஏனென்றால் இளையராஜா நம் அனைவருடைய வாழ்விலும் இருக்கிறார். நாம் சிரிக்கின்ற போதிலும், நம்முடைய சோகத்திலும் அவருடைய பாடல்கள் தான் நமக்கு துணை. இதற்கான பணிகள் இன்று முதல் ஆரம்பமாகிறது. இது நிச்சயம் 1௦௦ பேர் கலந்து கொள்ளும் ஒரு பாராட்டு விழாவாக இருக்காது, பிரம்மாண்டமான விழாவாக இருக்கும் என்றார்.
வியாழன்று பதவியேற்பு விழா : தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவியேற்பு விழா, வியாழன் அன்று மாலை 6மணி அளவில் ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த அனைவரும் தங்கள் குடும்பத்தோடு கலந்து கொள்ள வேண்டும் என செயலாளர் பைவ்ஸ்டார் கதிரேசன் கேட்டு கொண்டார்.
இளையராஜா உடனான சந்திப்பின் போது விஷால் தவிர்த்து துணை தலைவர் பிரகாஷ்ராஜ், கௌரவ செயலாளர்கள் பைவ்ஸ்டார் கதிரேசன், ஞானவேல்ராஜா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பார்த்திபன், எம்.கபார் ஆகியோர் இருந்தனர்.