'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
ராகவா லாரன்ஸ் நடித்திருந்த மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரித்திருந்தார். பல இடையூறுகளுக்கு பிறகு அந்தப் படம் வெளியானது. தற்போது ஆர்.பி.சவுத்ரியின் தயாரிப்பில் ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கடம்பன் படம் வருகிற ஏப்ரல் 14ந் தேதி வெளியாகிறது. அன்றைய தினம் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சிவலிங்கா படமும் வெளிவருகிறது. "இரண்டு படமும் மோத வேண்டாம் கடம்பன் படத்தை தள்ளிப் போடுங்கள்" என்ற சிவலிங்கா படத் தரப்பில் கேட்டதற்கு ஆர்.பி.சவுத்ரி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதற்கான விளக்கத்தை நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆர்.பி.சவுத்ரி அளித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை மிகுந்த சிரமத்திற்கு இடையே வெளியிட்டோம். எதிர்மறை விமர்சனங்கள் வந்தபோதும் 120 தியேட்டரில் 25 நாளை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. எல்லோருக்கும் படத்தால் லாபம்தான். தற்போது வெளிவர உள்ள சிவலிங்கா படமும் என் படம் மாதிரிதான். லாரன்ஸ் நான் அறிமுகப்படுத்தின ஹீரோ. அதே தேதியில் கடம்பன் படத்தை வெளியிடுவதால் அவர்களுக்கு சில வருத்தம் உண்டு. ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை.
கடம்பன் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்ட படம். இதே மாதிரியான படம் தான் ஜெயம் ரவி நடிக்கும் வனமகன். இரண்டும் ஒரே ஜோர்னரில் தயாராகி உள்ளது. அந்தப் படமும் விரைவில் வெளிவர இருக்கிறது. அதனால் அந்தப் படத்திற்கு முன்னதாக கடம்பனை வெளியிட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இப்படி ஒரு சூழ்நிலை இல்லாமல் இருந்திருந்தால் கடம்பனை இரண்டு வாரங்களுக்கு தள்ளிப்போட்டிருப்பேன். இதை அவர்களிடமும் தெரிவித்து விட்டேன். புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன். என்றார்.