ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சின்னத்திரை புகழ் நடிகை ‛மைனா நந்தினியின் கணவர் கார்த்திகேயன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். ‛வம்சம், ‛கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை நந்தினி. சினிமாவில் பிரபலமானதை விட சின்னத்திரையில் தான் இவர் மிகவும் பிரபலம்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‛சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்ற கேரக்டரில் நடித்தார். அப்போது முதல் ‛மைனா புகழ் அவரோடு ஒட்டிக்கொள்ள மைனா நந்தினியானார். தொடர்ந்து விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார். தற்போது ஜீ தமிழில் குழந்தைகள் நிகழ்ச்சி, டார்லிங் டார்லிங் தொடர் என பிஸியாக இருக்கிறார்.
நந்தினி, கார்த்திக்கிகேயன் என்பவரை கடந்தாண்டு 5-ம் தேதி ஜூன் மாதம், காதலித்து திருமணம் செய்து கொண்டார். கார்த்திகேயன், சென்னையில் சொந்தமாக ஜிம் வைத்துள்ளார், ஜிம் மாஸ்டராகவும் உள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்தனர்.
கார்த்திகேயன் நேற்று இரவு விருகம்பாக்கத்தில் ஒரு விடுதியில் தங்கியிருக்கிறார். என்ன காரணமோ தெரியவில்லை, குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தற்கொலைக்கு காரணம் என்ன...?
தற்கொலைக்கான காரணம் முழுமையாக தெரியவில்லை. அதேசமயம், கார்த்திகேயன் ஏற்கனவே திருமணமானவர், அவரது முதல்மனைவி இறந்தது தொடர்பாக கார்த்திகேயன் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறை சென்றிருக்கிறார். இது நந்தினியின் குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை. ஆனால் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி தான் நந்தினி திருமணம் செய்தார். ஆனால் கடந்த சில மாதங்களாகவே நந்தினி - கார்த்திகேயன் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த மன வேதனையின் காரணமாக தான் கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் தனது தற்கொலைக்கு காரணம் தனது மாமனார் தான் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார் கார்த்திகேயன்.
திருமணமாகி ஓராண்டுகள் ஆகாத நிலையில் கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை கலைஞர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரை கலைஞர்களின் தற்கொலை அதிகரித்து வருகிறது. நடிகர் சாய் பிரசாந்த், நடிகை சபர்ணா ஆகியோ கடந்தாண்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.