ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவில் பேய் கதை சீசன் இன்னும் முடிவுக்கு வரவில்லை. டோரா படத்தில் கார் பேய், மியாவ் படத்தில் பூனை பேய் என விதவிதமான பேய்கள் வந்து கொண்டிருக்கிறது. அடுத்து 3500 சதுர அடி என்ற படத்தில் ரியல் எஸ்டேட் பேய் வருகிறது. ரைட் வியூ சினிமா சார்பில் ஜெய்சன் ஜோசப் தயாரிக்கும் இந்தப் படத்தை ஸ்டீபன் இயக்கி உள்ளார். பிரான்சிஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்துள்ளார். நிகில், ஆகாஷ், சுவாதி தீக்ஷித், மேக்னா முகேஷ் என்ற புதுமுகங்களுடன் ரகுமான், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரதாப் போத்தன், உள்பட பலர் நடித்துள்ளனர். இனியாக பேயாக நடித்துள்ளார். படம் பற்றி இயக்குனர் ஸ்டீபன் கூறியதாவது:
ரியல் எஸ்டேட் துறையில் நடைபெற்ற சில உண்மை சம்பவங்களை பின்னணியாக கொண்டு வித்தியாசமான திரைக்கதையுடன் தயாராகியிருக்கும் படம் 'சதுர அடி 3500'. பேய் இருக்கிறதா? இல்லையா? என்பதைப் பற்றி முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் புலனாய்வு செய்யும் ஒரு கேரக்டர். அமானுஷ்ய சக்திகளை கண்டு கொள்வது எப்படி? அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? வாழ்ந்து இறந்த ஒருவரின் ஆத்மாவின் பயணம் எங்கு எப்படியிருக்கும்? இது போன்ற சுவராஸ்யமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக இப்படத்தின் திரைக்கதை தயாராகியிருக்கிறது.
படப்பிடிப்பு பெங்களூரூ, சாலக்குடி, சென்னையின் புறநகர் பகுதி மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் நடைபெற்றது. படப்பிடிப்பு நடைபெறும் போது படக்குழுவினர்களில் பலருக்கு எதிர்பாராத சம்பவங்கள் நடந்தேறின. இதனால் ஏற்பட்ட பயத்தின் காரணமாக படபிடிப்பு பல முறை தள்ளிவைக்கப்பட்டது. ஹாரர், காமெடி, ஆக்ஷ்ன், லவ் என கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியிருக்கும் இதன் படப்பிடிப்பு அண்மையில் நிறைவுற்றது என்றார் இயக்குநர் ஸ்டீபன்.