பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
தனி ஒருவனைத் தொடர்ந்து மோகன்ராஜா இயக்கி வரும் படம் வேலைக்காரன். சிவகார்த்திகேயன், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையிலுள்ள பிரசாத் லேப்பில் போடப்பட்டுள்ள செட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. கதைப்படி இதில் மில் தொழிலாளியாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ரோபோ சங்கர் அவருடன் வேலை செய்யும் நண்பராக நடித்து வருகிறார்.
மேலும், 1945-ல் நடக்கும் கதையில் இந்த படம் உருவாகிறது. அதனால் அந்த காலகட்டத்து காஸ்டியூம், ஹேர்ஸ்டைல் என்று பக்காவமாக தன்னை மாற்றி நடித்துக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்து வருகிறார். அதே பகுதியில் உள்ள ஒரு பெரும்புள்ளியாக பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்.
அந்த காலகட்டத்தில் உள்ள முதலாளிகள் அணிவது போன்ற உடையணிந்து அவர் நடிக்கிறார். அதோடு, நடிகர் நடிகைகள் பேசும் டயலாக்கில் இந்த காலத்து வார்த்தைகள் இல்லாமல், 1945ல் தமிழ் மக்கள் எந்த மாதிரி வார்த்தை களை பேசினார்களோ அதேபோன்று எழுதியுள்ளார் மோகன்ராஜா. முக்கியமாக இந்த படத்தின் கிளைமாக்ஸ் பேசக்கூடியதாக இருக்குமாம். அதனால் அது முன்பே வெளியில் கசிந்து விடாமல் இருக்க, சில முக்கிய டெக்னீசியன்களை மட்டுமே உடன் வைத்து அந்த காட்சிகளை படமாக்கவும் திட்டமிட்டுள்ளாராம் மோகன்ராஜா.