ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பி.வாசு இயக்கியுள்ள படம் சிவலிங்கா. ஏப்ரல் 14-ந்தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. இயக்குனர் பி.வாசு, ராதாரவி, லாரன்ஸ், ரித்திகா சிங், பானுப்பிரியா, சக்தி, இசையமைப்பாளர் தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது இயக்குனர் பி.வாசு பேசுகையில், சிவலிங்கா கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றி படம். தமிழில் இதை ரீமேக் பண்ணினா யாரை வைத்து பண்ணலாம் என்று யோசித்தபோது லாரன்ஸ் மாஸ்டர்தான் நினைவில் வந்தார். அவரை அழைத்து கன்னட சிவலிங்காவை போட்டுக்காட்டினேன். நான் ரஜினியை வைத்து இயக்கிய உழைப்பாளி படத்தில் அவர் நான்காவது லைனில் நின்று நடனமாடிய வர். அதன்பிறகு படிப்படியாக உயர்ந்து இப்போது முன்னணி ஹீரோவாகியிருக்கிறார்.
வியாபாரம் ஆகக்கூடிய ஹீரோவாக தன்னைத்தானே வளர்த்துக்கொண்டவர் லாரன்ஸ். படம் பார்த்த உடனே அவருக்கு பிடித்து விட்டது. அப்படி பண்ணலாம் இப்படி பண்ணலாம் என்று கதையைப்பற்றி விவாதிக்கத் தொடங்கினார்.
இறுதிச்சுற்று படத்தில் ஒரு ரவுடித்தனமான ஒரு பொண்ணு. அவர் பேசும்போது திமிறுத்தனம் இருக்கும்.
அதைப்பார்த்துதான் அவரை புக் பண்ணினேன். இன்னொரு சந்தோசமான விசயம் வடிவேலுவை எப்படியாவது நடிக்க வைக்கனும் என நினைத்தேன். அப்புறம் அவரிடம் கதையை சொல்லி நடிக்க வைத்தேன். இந்த படத்தில் காமெடி மட்டுமின்றி கேரக்டரும் பண்ணியிருக்கிறார். சந்திரமுகி மாதிரி காமெடி பண்ணியிருக்கிறார் வடிவேலு. வரும் வராது, மாப்பு வச்சிட்டியே ஆப்பு -என்பது போல் இந்த படத்திலும் வடிவேலு ஒரு டயலாக் பேசியிருக்கிறார்.
அதுவும் ஹிட்டாகும். இந்த படத்தில் ராதாரவி சைலண்டாக நடித்துள்ளார். கன்னடத்தைவிட இந்த படத்தில் சக்தி நல்ல ரோலில் பண்ணியிருக்கிறார். அவர் கேரக்டரை இன்னும் நன்றாக பண்ணலாம் என லாரன்ஸ் சொன்னதை அடுத்து இன்னும் வெயிட்டாக மாற்றியிருக்கிறேன். நன்றாக நடித்திருக்கிறார்.
இன்னொரு முக்கியமான வேடத்தில் ஒரு புறா நடித்துள்ளது. சந்திரமுகியில ஒரு படி முக்கியமானதாக இருந்தது போல், இதில் புறா இருக்கும். புறாவைப்பார்க்கும்போது அடுத்து என்ன பண்ணப்போகிறதோ என எதிர்பார்க்க வைக்கும். எப்படி ஒரு புறா ஒரு கொலைக்கு சாட்சியாக முடியும் என்கிற வகையில் ஒரு புது கண்டன்ட்டை கதையாக்கியிருக்கிறேன். அதேபோல் ரயிலும் முக்கியமானதாக உள்ளது. ஊர்வசி, வடிவேலு காம்பினேசன் பிரமாதம். ஊர்வசி ஒரு மல்டி டேலண்ட் ஆர்ட்டிஸ்ட்.
மைசூர் பேலசில் படப்பிடிப்பு நடத்தியபோது காவிரி பிரச்சினை வந்தது. அப்போது அங்கிருந்து சென்னை வந்து விட்டோம். அதன்பிறகு அங்கு செல்லாமலேயே இங்கேயே மைசூர் பேலஸ் செட் போட்டு படமாக்கினோம்.
இசையமைப்பாளர் தமன் ஒரு ஜாலியான இசையமைப்பாளர். எனது ஸ்கூல் ப்ரண்ட்சுகளை பார்த்தால் வரும் எனர்ஜி தமனைப்பார்க்கும்போது வரும். எப்போதுமே எனர்ஜியோடுதான் பேசுவார். அதேமாதிரிதான் அவரது மியூசிக்கும். குஷியாக இருப்பார். தமன்னோட ஒர்க் பண்ணியதே ஒரு குஷிதான். சிவலிங்கா பாடளெல்லாம் பிரமாதமாக பண்ணியிருக்கிறார். இதுவரை நான் எத்தனையோ படங்கள் பண்ணியிருந்தாலும் அதில் கிடைக்காத ஒரு விசயம் இந்த படத்தில் கிடைத்துள்ளது.
அதாவது, ஒரு இடைவேளை சீனில் ரித்திகா சிங் நடித்துள்ளார். அதை படமாக்கும்போது லாரன்ஸ் அங்கு இல்லை. ஆனால் பின்னர் வந்து அந்த காட்சியை பார்த்து அசந்து விட்டார். சூப்பரா வந்திருக்கு சார் என்று மனதார பாராட்டினார். அந்த அளவுக்கு இன்னொரு நடிகர் நடித்ததை பாராட்டும் மனம் கொண்டவர் லாரன்ஸ்.
இந்த படம் ராகவா லாரன்சின் ராகவேந்திரா கோயிலில்தான் ஆரம்பித்தோம். அவர் வளர்க்கிற ஆசிரம குழந்தைகளை இந்த படத்தின் பாடலில் நடிக்க வைத்தோம். அந்த குழந்தைகளோட வாழ்த்தும் இந்த படத்திற்கு உள்ளது. அதனால் எந்த தடையும் தடங்கலும் இல்லாமல் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தில் வரும் கேரக்டரை யாரும் மறக்க மாட்டாங்க. குறிப்பாக குழந்தைகளுக்கு பிடித்தமான படமாக சிவலிங்கா இருக்கும் என்றார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் பேசுகையில், இந்த படத்தில் வாசு சாருடன் ஒர்க் பண்ணினது மிகப்பெரிய பாக்கியம்னு சொல்லலாம். எனது தலைவர் ரஜினி சார் நடித்த படங்களில் அதிக படங்களை இயக்கியவர்களில் பி.வாசு சாரும் ஒருவர். பெரிய டைரக்டராச்சே என்று முதல் நாள் பயமாக இருந்தது. ஆனால் அவர் ப்ரண்ட்லியாக இருந்தார். அவருடன் நிறைய படம் பண்ண வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஷக்திக்கு எப்படி யெல்லாம் ரசித்து பண்ணினாரோ அப்படித்தான் என்னை வைத்து படம் இயக்கினார்.
இந்த படத்தில் ரித்திகா சிங்தான் பர்ஸ்ட் ஹீரோ. ரொம்ப நல்ல கேரக்டர், ரொம்ப ஹார்டு ஒர்க் பண்ணியிருக்காங்க. அவங்களுடைய ஒவ்வொரு ஷாட்டும் அவ்ளோ கஷ்டப்பட்டாதான் ஓகே ஆகும். இரண்டாவது ஹீரோ வடிவேலு சார். அந்த அளவுக்கு காமெடி பண்ணியிருக்கிறார். நான் அவரோட ரசிகன். ரொம்ப நாளைக்குப்பிறகு அவரைப்பார்த்து இந்த படத்தில் நான் ரசித்தேன். பானுப்பிரியா மேடம், ராதாரவி அண்ணன் எல்லோருமே நன்றாக நடித்துள்ளனர். அவர்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
ராதாரவி அண்ணன் , உம்மேல நிறைய கண்ணு பட்டிருக்கு பாத்துக்கோ என்றார். உங்களைப் போன்றோர் ஆசீர் வாதம் இருக்கிற வரைக்கும் என்னை எந்த கண்ணும் ஒன்னும் செய்யாது. இந்த படத்துல ஷக்தி பிரமாதமா பண்ணியிருக்காரு. அவர் நடித்த க்ளைமாக்ஸ் சீனில் எனக்கே கண்கலங்கி விட்டது. மூன்றாவது ஹீரோன்னா அவரைத்தான் சொல்லனும். அந்த வகையில், நான் நான்காவது ஹீரோதான். இந்த படத்தில் முதல் காட்சியில் இருந்தே கதை இருக்கு. காஞ்சனா படம் மாதிரி இந்த படத்திற்கும் பிரமாதமாக இசையமைத்திருக்கிறார் தமன் என்றார்.