பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். தனுஷ் தங்களது மகன் என்று உரிமை கோரி, மதுரை மாவட்டம், மேலூர் அருகே மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன், மீனா தம்பதியினர் மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கிலிருந்து விலக்கு அளிக்க கோரி தனுஷ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து அவருக்கு அங்க அடையாளங்கள் உள்ளிட்டவைகளை சரிபார்க்கும் பணி நடந்தது. இதில், தனுஷ், தனது அங்க அடையாளங்களை மாற்றியிருப்பதாக மருத்துவ அறிக்கையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இருந்த தனுஷ் கையெழுத்து போலியானது. மனுவின் நகலை தங்களுக்கு தர வேண்டும் என மேலுார் தம்பதியினரின் வழக்கறிஞர் டைட்டஸ், நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.