தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ராகினி எம்எம்எஸ், கேங்ஸ் ஆப் வசிப்பூர், டி-டே, குயின் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ். தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் ராஜ்குமார், அஸ்வினி ஐயர் தவாரி இயக்கும் ‛பார்லி கி பார்பி' என்ற படத்திலும் நடிக்கிறார். இதில் ஆயுஸ்மான் குராணா மற்றும் கிர்த்தி சனோன் முன்னணி ரோலில் நடிக்க, ராஜ்குமாரும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார்.
இதுகுறித்து ராஜ்குமார் கூறுகையில், பார்லி கி பார்பி படத்தில் நானும் நடிக்கிறேன். படத்தில் நான் பிரீதம் என்ற கதாபாத்திரத்தில் ஒரு கவிஞராக நடிக்கிறேன். நான் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான வேடம் இது என்றார்.
பார்லி கி பார்பி படம் வருகிற ஜூலை 21-ம் தேதி ரிலீஸாக உள்ளது.