இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மார்ச் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான 31ம் தேதி “கவண், டோரா, அரசகுலம், அட்டு, நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல, செவிலி” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் போட்டி என்பதே 'கவண்' படத்திற்கும், 'டோரா' படத்திற்கும்தான். கடந்த மூன்று நாட்களாக திருப்தியான வசூலைக் கொடுத்துக் கொண்டிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் சொல்கிறார்கள்.
'கவண்' படத்தின் முதல் பாதி சிறப்பாக இருப்பதாகவும், 'டோரா' படத்தின் இரண்டாம் பாதி சிறப்பாக இருப்பதாகவும்தான் பெரும்பாலான ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். 'கவண்' படத்தின் இரண்டாம் பாதி திரைக்கதை வழக்கமான கமர்ஷியல் சினிமாவாகவும், 'டோரா' படத்தின் முதல் பாதி அழுத்தமாக இல்லை என்பதும்தான் பெரும்பாலான ரசிகர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
இருந்தாலும் 'கவண்' படம் விஜய் சேதுபதி இதுவரை நடித்து வெளிவந்த படங்களிலேயே அவருக்கான சிறந்த ஓபனிங்காக அமைந்துள்ளது என்கிறார்கள். இப்படம் கடந்த மூன்று நாட்களில் சுமார் 9 கோடி வரை வசூலித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
'டோரா' படம் கடந்த மூன்று நாட்களில் சுமார் 5 கோடி வரை வசூலித்திருக்கும் என்றும் தகவல். நயன்தாரா தான் தமிழ் சினிமாவின் வசூல் நாயகி என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளதாம். அவருக்கென்று தமிழ் ரசிகர்களிடம் இருக்கும் தனி வரவேற்பே அதற்குக் காரணம் என்கிறார்கள்.