விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
மார்ச் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான 31ம் தேதி “கவண், டோரா, அரசகுலம், அட்டு, நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல, செவிலி” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் போட்டி என்பதே 'கவண்' படத்திற்கும், 'டோரா' படத்திற்கும்தான். கடந்த மூன்று நாட்களாக திருப்தியான வசூலைக் கொடுத்துக் கொண்டிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் சொல்கிறார்கள்.
'கவண்' படத்தின் முதல் பாதி சிறப்பாக இருப்பதாகவும், 'டோரா' படத்தின் இரண்டாம் பாதி சிறப்பாக இருப்பதாகவும்தான் பெரும்பாலான ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். 'கவண்' படத்தின் இரண்டாம் பாதி திரைக்கதை வழக்கமான கமர்ஷியல் சினிமாவாகவும், 'டோரா' படத்தின் முதல் பாதி அழுத்தமாக இல்லை என்பதும்தான் பெரும்பாலான ரசிகர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
இருந்தாலும் 'கவண்' படம் விஜய் சேதுபதி இதுவரை நடித்து வெளிவந்த படங்களிலேயே அவருக்கான சிறந்த ஓபனிங்காக அமைந்துள்ளது என்கிறார்கள். இப்படம் கடந்த மூன்று நாட்களில் சுமார் 9 கோடி வரை வசூலித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
'டோரா' படம் கடந்த மூன்று நாட்களில் சுமார் 5 கோடி வரை வசூலித்திருக்கும் என்றும் தகவல். நயன்தாரா தான் தமிழ் சினிமாவின் வசூல் நாயகி என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளதாம். அவருக்கென்று தமிழ் ரசிகர்களிடம் இருக்கும் தனி வரவேற்பே அதற்குக் காரணம் என்கிறார்கள்.