ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மார்ச் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான 31ம் தேதி “கவண், டோரா, அரசகுலம், அட்டு, நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல, செவிலி” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் போட்டி என்பதே 'கவண்' படத்திற்கும், 'டோரா' படத்திற்கும்தான். கடந்த மூன்று நாட்களாக திருப்தியான வசூலைக் கொடுத்துக் கொண்டிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் சொல்கிறார்கள்.
'கவண்' படத்தின் முதல் பாதி சிறப்பாக இருப்பதாகவும், 'டோரா' படத்தின் இரண்டாம் பாதி சிறப்பாக இருப்பதாகவும்தான் பெரும்பாலான ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். 'கவண்' படத்தின் இரண்டாம் பாதி திரைக்கதை வழக்கமான கமர்ஷியல் சினிமாவாகவும், 'டோரா' படத்தின் முதல் பாதி அழுத்தமாக இல்லை என்பதும்தான் பெரும்பாலான ரசிகர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
இருந்தாலும் 'கவண்' படம் விஜய் சேதுபதி இதுவரை நடித்து வெளிவந்த படங்களிலேயே அவருக்கான சிறந்த ஓபனிங்காக அமைந்துள்ளது என்கிறார்கள். இப்படம் கடந்த மூன்று நாட்களில் சுமார் 9 கோடி வரை வசூலித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
'டோரா' படம் கடந்த மூன்று நாட்களில் சுமார் 5 கோடி வரை வசூலித்திருக்கும் என்றும் தகவல். நயன்தாரா தான் தமிழ் சினிமாவின் வசூல் நாயகி என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளதாம். அவருக்கென்று தமிழ் ரசிகர்களிடம் இருக்கும் தனி வரவேற்பே அதற்குக் காரணம் என்கிறார்கள்.