போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் |
துல்கர் சல்மான் மலையாளத்தில் அறிமுகமான முதல் படம் 'செகன்ட் ஷோ'. இந்தப்படத்தை ஸ்ரீநாத் ராஜேந்திரன் என்பவர் இயக்கியிருந்தார். இந்தப்படத்தில் துல்கர் ஜோடியாக கௌதமி நாயர் நடித்திருந்தார். துல்கரின் மாமன் மகளான இவர் சந்தர்ப்ப சூழலால் ரவுடியாக மாறிய துல்கரின் காதலை உதறிவிட்டு செல்லும் கேரக்டரில் நடித்திருந்தார். துல்கரை போலவே இவருக்கும் இதுதான் அறிமுகப்படம். அதன்பின் டயமன்ட் நெக்லஸ், சாப்டர்ஸ், கூதரா உட்பட வெகு சில படங்களில் மட்டுமே நடித்தார். அதற்கு காரணம் இவர் திரையுலகின் முக்கியமான நபர் ஒருவரை காதலிப்பதாகவும் அதனால் தான் பட வாய்ப்புகளை தவிர்ப்பதாகவும் சொல்லப்பட்டு வந்தது.
கடைசியில் பார்த்தால் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனரான ஸ்ரீநாத் ராஜேந்திரனைத்தான் அவர் காதலித்து வந்துள்ளார் என்பது சமீபத்தில் தான் தெரியவந்தது. ஸ்ரீநாத் ராஜேந்திரனுக்கும் அதுதான் முதல் படம். இந்தநிலையில் நேற்று இவர்கள் இருவரின் திருமணம் எளிய முறையில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் கௌதமியின் முதல் ஜோடியான துல்கர் சல்மானும் அந்தப்படத்திலே அறிமுகமான இன்னொரு நடிகரும் துல்கர், கௌதமி நாயர் மற்றும் ஸ்ரீநாத் ராஜேந்திரன் ஆகியோரின் நண்பருமான சன்னி வெய்னும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.