'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஈட்டி படத்திற்கு பிறகு ரவி அரசு இயக்கும் படம் ஐங்கரன். ஜி.வி.பிரகாஷ்குமார், மகிமா நம்பியார் நடிக்கிறார்கள். சரவணன் அபிமன்யூ ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. படம் பற்றி இயக்குனர் ரவி அரசு கூறியதாவது:
ஈட்டி படத்தை ரத்தம் உறையாத த்ரோம் பாஷ்தினிய என்ற நோயை மையமாக கொண்டு இயக்கினேன். அந்தப் படத்திற்கு பிறகு அடுத்து சமூக அக்கறையுடன் ஒரு படம் பண்ண வேண்டும் என்பதற்காக கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக் கொண்டு ஐங்கரன் கதையை எழுதினேன். இது பொறியில் மாணவர்களின் கதை. அவர்கள் வழியாக சில அரசியல் பிரச்னைகளை பேசுகிறேன். நம்மை சுற்றி எவ்வளவோ விஷயங்கள் நடந்தாலும் நமக்கு பாதிப்பில்லை என்றால் ஒதுங்கி சென்றுவிடுகிறோம். ஒரு நாள் அது நம்மை பாதிக்கும் என்பதை மறந்து விடுகிறோம்.
ஹீரோவுக்கு இரண்டு முகங்கள், ஒரு முகம் நல்ல மாணவன் என்றால் இன்னொரு முகம் கொஞ்சம் முரட்டுத்தனமானது. இந்த இரண்டும் கலந்த கலவையாகத்தான் எல்லோரும் இருக்கிறோம். நல்ல கதையும், திரைக்கதையும் உழைப்பும் அமைந்தால் கமர்ஷியல் அம்சங்கள் தேவையில்லை என்பது என் கருத்து அதன்படியே ஐங்கரனை உருவாக்கி இருக்கிறேன். என்கிறார் ரவிஅரசு.