ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபத்தில் வெளியான படம் நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல. இந்த படத்தை மணிரத்தினத்தின் உதவியாளரும், பிரபல கதாசிரியர் ஆர்.செல்வராஜின் மகனுமான தினேஷ் செல்வராஜ் இயக்கி உள்ளார். இதில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருப்பவர் ஜெகதீஷ். இவர் சென்னையில் உள்ள ஒய் மற்றும் லிட்டில் தியேட்டர் நாடக குழுவில் ஆங்கில நாடகங்களில் நடித்தவர். அதன் மூலம் சினிமாவுக்கு வந்திருக்கிறார். தற்போது தேசிய விருது பெற்ற இயக்குனர் ஜானகி விஸ்வநாத் இயக்கத்தில் ஒரு படத்திலும், தமிழ், மலையாள மொழிகளில் தயாராகும் ஈஷா என்ற படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார். நடிக்க வந்தது பற்றி அவர் கூறியதாவது:
நாலுபேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை படத்திற்காக ஆடிசனுக்கு சென்றேன். 350 பேர் வந்திருந்தனர். அதிலிருந்து என்னை தேர்வு செய்தனர். நாடகம் பற்றித் தெரியும். சினிமா பற்றி அதிகம் தெரியாததால் என்னை இயக்குனரிடம் ஒப்படைத்து அவர் சொன்னபடி செய்தேன். என்ஜீயரிங் படிக்கும்போது கல்லூரி நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து படிப்பு முடிந்ததும் நாடக குழுவில் இணைந்து நடித்து வந்தேன். இயக்குனராக வேண்டும் என்று ராஜீவ் மேனனிடம் உதவியாளராக சேர்ந்தேன். படம் இயக்கும் முயற்சியில் இருந்தபோது நடிக்கும் வாய்ப்பு வந்தது. தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. விரைவில் படமும் இயக்குவேன். என்கிறார் ஜெகதீஷ்.