'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
நடிகர் திலகம் சிவாஜி அமெரிக்காவிற்கு அந்த நாட்டு விருந்தினராக சென்ற மாதிரி கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் தனது மனைவி டி.ஏ.மதுரத்துடன் ரஷ்யா சென்றார். இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் கலாச்சார பரிமாற்றத்துக்காக அப்போதைய பிரதமர் நேரு ஒரு கலைக்குழுவை ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்தார். அந்த குழுவில் தமிழ் நாட்டிலிருந்து என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம், இயக்குனர் கே.சுப்பிரமணியம் ஆகியோர் சென்றனர்.
ரஷ்யாவின் பல இடங்களை சுற்றிப் பார்த்தனர். அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் என்.எஸ்.கிருஷ்ணன் பல குட்டிக் கதைகளை கூறினார். அதனை இயக்குனர் கே.சுப்பிரமணியம் மொழிபெயர்த்து கூறினார். இந்த கதைககள் ரஷ்ய மக்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. கதை கேட்க திரளாக மக்கள் கூடினார்கள். இதைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ரஷ்ய அரசு, என்.எஸ்.கிருஷ்ணன் கதை கூறுவதையும் அதை மக்கள் ரசிப்பதையும் படமாக எடுத்தனர். ரஷ்யாவின் பல முக்கிய இடங்களுக்கு அவரை அழைத்துச் சென்று கதை சொல்ல வைத்து அதனை படம்பிடித்தனர். சுற்றுப் பயணம் முடிந்து திரும்பும்போது அந்த படத்தின் ஒரு பிரதியை ரஷ்ய அரசாங்கம் வைத்துக் கொண்டு இன்னொரு பிரதியை என்.எஸ்.கிருஷ்ணனிடம் தங்கள் நாட்டு அன்பளிப்பாக கொடுத்தனர். சென்னை திரும்பிய அவர் அந்தப்ப படதத்தை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிடம் ஒப்படைத்தார்.