தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடந்து முடிந்து தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து அவரது அணியில் போட்டியிட்ட மற்றவர்களும் வெற்றி பெற்று வருகின்றனர்.
தமிழ் சினிமாவுக்கு பெரிய பிரச்னையாக இருப்பது திருட்டு விசிடி மற்றும் ஆன்லைன் பைரசி. இதுதொடர்பாக ஏற்கனவே விஷால் களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தற்போது பதவிக்கு வந்துள்ளதால் திருட்டு விசிடி மற்றும் ஆன்லைன் பைரசியை ஒழிப்போம் என்றதோடு அவர்களுக்கு சவாலும் விட்டுள்ளார் விஷால்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஷால்... இளைஞர்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். திருட்டு விசிடி, ஆன்லைன் பைரசி, தமிழ் ராக்கர்ஸ் ஆகியோருக்கு இப்போது சொல்கிறேன். நாங்கள் ஜெயித்து விட்டோம், இப்போது வந்து பாருங்கள். பொறுப்பில் இல்லாமலே இறங்கி வேலை பார்த்தவன், இப்போது பதவிக்கு வந்துவிட்டோம். இனிபாருங்கள் என்று சவால்விட்டார்.