‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் இன்று நடக்கிறது. சென்னை தனியார் கல்லூரியில் நடக்கும் தேர்தலில் ரஜினி, கமல் உள்ளிட்டோர் ஓட்டளித்தனர்.
தேர்தலின் போது, தேர்தல் நடத்தும் அதிகாரி ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் நேரில் ஆய்வ செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், பகல் 12 மணியளவில் 606 ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது. மொத்தம் 1200 பேர். தற்போதுள்ள இதே விறுவிறுப்புடன் ஓட்டுக்கள் பதிவானால் 1000 பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். எந்த பிரச்னையும் இல்லாமல் அமைதியான முறையில் தேர்தல் நடந்து வருகிறது. வேட்பாளர்களும் நல்ல முறையில் ஒத்துழைப்பு அளிக்கிறார்கள்.
மாலை 4 மணிக்கு ஓட்டுப்பதிவு முடியும். 5 மணியளவில் ஓட்டுக்கள் எண்ணப்படும். முதலில் சங்க செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர். பின்னர் சங்க நிர்வாகிகள் தேர்வு நடக்கும். நிர்வாகிகளில் 85 பேரில் 21 பேரை தேர்வு செய்ய வேண்டும்.அதற்கு கூடுதல் நேரம் தேவைப்படும்.
அதனால் முடிவுகள் வெளியாக இரவு 12 அல்லது ஒரு மணி ஆகலாம். ஆனால் இன்றைக்குள் முடிவுகளை அறிவித்து விடுவோம். ஓட்டளிக்கும் அறைக்குள் உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். ஓட்டு சீட்டு முறையே பயன்படுத்தப்படுகிறது. அதில் மொத்தம் 5 பதவிகள் உள்ளது. ஒவ்வொன்றிற்குள் வெவ்வேறு நிறப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. ஓட்டளித்து விட்டு, அந்ததந்த பதவிக்குரிய பெட்டிகளில் ஓட்டுச்சீட்டுக்களை அளிக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.