வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
நயன்தாரா நடித்து வெளியாகிய வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் ‛டோரா. இப்படத்தை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் உருவாகும் படம் கொலையுதிர் காலம். கமலின் உன்னைப் போல் ஒருவன், அஜித்தின் பில்லா 2 படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி இப்படத்தை இயக்குகிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்தப் படத்தை இந்திப் பட தயாரிப்பாளர் வாசு பக்னானி தயாரிக்கிறார். இவர் இந்தியில் ஏராளமான படங்களைத் தயாரித்து இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது, நான் தமிழுக்கு புதிதில்லை. தமிழில் வெளியான சின்ன மாப்பிள்ளை படத்தைப் பார்த்துதான் தயாரிப்பாளர் ஆனேன். அதை இந்தியில் கூலி நம்பர் 1 என்று ரீமேக் செய்தேன். படம் ஹிட்டானதால் தொடர்ந்து அங்கு படம் தயாரித்து வருகிறேன். கொலையுதிர் காலம் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். ஹீரோவாக ஜெர்மன் நடிகர் ஒருவர் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் பிரபுதேவா, தமன்னா நடிக்கிறார்கள். இந்தியில் நயன்தாரா ஏன் நடிக்கவில்லை என்று கேட்கிறார்கள். நயன்தாரா ரெடி என்றால் நான் அவரை இந்தியில் ஹீரோயினாக நடிக்க வைக்க தயார்தான். ஆனால் அவர் ரெடியில்லையே என்றார்.