சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
ரசிகர்களைப் பொறுத்தவரை முன்னணி ஹீரோக்களுக்குத்தான் அவர்கள் நடித்த படங்கள் திரைக்கு வரும்போது பெரிய அளவில் பேனர்கள் கட்டி, ராட்சஸ கட்அவுட்கள் வைத்து வரவேற்பு கொடுப்பார்கள். அதோடு பாலாபிஷேகமும் நடத்துவார்கள். தமிழ் சினிமாவைப்பொறுத்தவரை ரஜினி, விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களின் படங்கள் திரைக்கு வருபோது இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், முதன்முறையாக நயன்தாராவுக்கும் அத்தகைய வரவேற்பினை கொடுத்துள்ளார்கள் தமிழ்நாட்டு ரசிகர்கள். தற்போது தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில வெளியாகியிருக்கும் படம் டோரா. இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பினை கொடுத்துள்ள ரசிகர்கள், விஜய், அஜித் படங்களுக்கு இணையாக பேனர்கள், கட்அவுட்கள் வைத்துள்ளனர். அதோடு சென்னையிலுள்ள ஒரு தியேட்டரில் பிரமாண்டமாக வைக்கப்பட்டுள்ள நயன்தாராவின் கட்அவுட்டுக்கு டோரா படம் வெளியான அன்று, மாலை அணிவித்து பாலாபிஷேகமும் செய்துள்ளனர். இது இதுவரை எந்தவொரு நடிகைகளுக்கும் கிடைக்காத பெருமை என்கிறார்கள்.