600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் துவங்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தயாரிப்பாளர்கள் சங்கம் தேர்தல் இன்று நடக்கிறது.
தயாரிப்பாளர் சங்கத்தில் எந்தாண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு போட்டிகள் கடுமையாக இருக்கிறது. இந்தாண்டு ராதாகிருஷ்ணன் அணி, விஷால் அணி , கேஆர் அணி என 3 அணியாக பிரிந்து தயாரிப்பாளர்கள் தேர்தலை சந்திக்க இருக்கிறார்கள்.
தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது. தனியார் கல்லூரியில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடை பெறுகிறது. தலைவர் , துணைத்தலைவர் , செயலாளர் ,பொருளாளர் உள்ளிட்ட 27 பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இன்று மாலையே ஓட்டுகள் எண்ணப்பட்டு இரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
காலை 9 மணி நிலவரப்படி 129 ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. நடிகை சுகாசினி, டைரக்டர் ஆர்.பி.சவுத்ரி, பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், சசிகுமார், அருண் பாண்டியன், மன்சூர் அலிகான், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் தங்களின் ஓட்டுக்களை பதிவு செய்தனர்.
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நடிகர் ரஜினியும் ஓட்டளித்தார். நடிகர்கள் பார்த்திபன், பிரகாஷ்ராஜ், நடிகைகள் குஷ்பூ, ராதிகா உள்ளிட்டோரும் ஓட்டளித்தனர். எஸ்.ஏ.சந்திரசேகர், சவுந்தர்யா ரஜினிகாந்த், தேவயானி, ராஜகுமாரன், நாசர், ராதாரவி, நட்டி என்ற நடராஜ் ஆகியோர் ஓட்டளித்தனர்.
தயாரிப்பாளர் சங்க தேர்தல் விறுவிப்பாக நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று தனது வாக்கை பதிவு செய்தார். அவரை தொடர்ந்து 12.20 மணியளவில் நடிகர் கமலும் வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.