அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
டோரா படத்தை தொடர்ந்து அறம், கொலையுதிர் காலம் என ஏகப்பட்ட படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் நயன்தாரா. இதில் கொலையுதிர் காலம் படத்தை உன்னைப்போல் ஒருவன் மற்றும் பில்லா-2 படங்களை இயக்கிய சக்ரி டோலெட்டி இயக்குகிறார். பாலிவுட்டில் உள்ள பிரபல தயாரிப்பு நிறுவனமான பூஜா என்டர்டைன்மெண்ட் அண்ட் பிலிம்ஸ் லிமிடெட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. கூடவே இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து தயாரிக்கிறார். இந்தியில் வெளியான கூலி நம்பர் 1 திரைப்படம் மூலம் தயாரிப்பு துறையில் நுழைந்த பூஜா என்டர்டைன்மெண்ட் மற்றும் பிலிம்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு இந்த கொலையுதிர் காலம் 31 வது படம். தமிழில் இவர்கள் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும்.
தமிழில் படம் தயாரிப்பது பற்றி இந்நிறுவன தயாரிப்பாளர் வாசு பக்னானி கூறுகையில், "சினிமா மீது எனக்கு காதல் ஏற்பட முக்கிய காரணம், தமிழில் வெளியான ‛சின்ன மாப்பிள்ளை' திரைப்படம் தான். அந்த படத்தை ஹிந்தியில் நான் கூலி நம்பர் 1 என்ற தலைப்பில் ரீமேக் செய்தேன். அதனை தொடர்ந்து சதி லீலாவதி படத்தை ரீமேக் செய்தேன். முதல்முறையாக ‛கொலையுதிர் காலம்' படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறேன்.
நான் பார்த்த சிறந்த நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர். அவரை ஹிந்தி பட உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பது என் ஆசை, அவ்வளவு திறமையானவர் அவர். தமிழில் நாங்கள் தயாரிக்கும் முதல் படத்திலேயே அவரோடு இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. இதே படம் ஹிந்தியில் தமன்னா மற்றும் பிரபுதேவா நடிக்க தயாராகிறது. எங்கள் நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனத்தோடு இணைந்து தென்னிந்திய திரையுலகில் தயாரிப்பு மட்டுமல்லாது விநியோக துறையில் ஈடுபடும் என்றார்.