ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஐபி-2 ஷூட்டிங்கிற்கு திடீரென வருகை தந்து தனுஷ், செளந்தர்யா உள்ளிட்ட படக்குழுவினரை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் ரஜினிகாந்த். வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் உருவாகி வருகிறது. தனுஷ், அமலாபால், பாலிவுட் நடிகை கஜோல் உள்ளிட்டவர்கள் முக்கியமான ரோலில் நடிக்கின்றனர். கஜோல் நெகட்டீவ் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அவருக்கு பெருந்தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. விஜபி-2 படத்தை ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா இயக்குகிறார்.
விஐபி-2 படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பு இன்று(ஏப்.,1-ம் தேதி) நடந்தது. அப்போது படப்பிடிப்பிற்கு திடீரென வருகை தந்த ரஜினி, அங்கிருந்த தனுஷ், செளந்தர்யா உள்ளிட்ட படக்குழுவினரை ஆச்சர்யப்படுத்தினார். அதோடு மருமகன் தனுஷ் நடிக்கும் காட்சிகளையும், மகளின் இயக்க திறமையையும் கண்டு வியந்தார்.
‛‛ஒரே சூப்பர் ஸ்டார், என் அப்பா, ‛விஐபி-2 படத்தின் கடைசிநாள் ஷூட்டிங்கிற்கு வருகை தந்தார். இதைவிட வேறு என்ன வேண்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார் செளந்தர்யா.
விஐபி-2வில் தன்னுடைய பகுதி ஷூட்டிங் முடிந்துவிட்டது. இதனால் இந்த யூனிட்டில் வேலை பார்த்த அனைவருக்கும் பிரியாணியுடன் அறுசுவை உணவை வழங்கினார் தனுஷ்.