விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
மஞ்சப்பை வெற்றிக்கு பிறகு ராகவன் இயக்கி உள்ள படம் கடம்பன். ஆர்யா, கேத்ரின் தெரசா நடிக்க முழுக்க முழுக்க அடர்ந்த காடுகளில் படத்தை எடுத்து முடித்திருக்கிறார் ராகவன். கடம்பனின் இறுதிகட்ட பணியில் பிசியாக இருக்கும் ராகவன், கடம்பன் பிறந்து வளர்ந்த கதை பற்றி கூறியதாவது:
மஞ்சப்பையில் அப்பாவி கிராமத்து முதியவரின் உளவியல் பற்றி சொன்னேன். அடுத்த படம் ஒரு சமூக பிரச்னையை தொடுவதாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்போது மலைவாழ் மக்கள், தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடுகிற செய்தியை படித்தேன். அவர்கள் பிரச்னை என்னென்ன என்பதை அறிய விரும்பினேன். இதற்காக தேனியிலிருந்து சேலம் வரை மலைகாடுகளில் நடந்தே சென்று அந்த மக்களை சந்தித்தேன். அவர்களுக்கு பல பிரச்னைகள் அவற்றில் முக்கியமானது எங்களை எங்களாகவே வாழ விடுங்கள் என்பதுதான். படத்துக்கு என்ன தேவையோ அந்த விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு அதை ரசிகர்கள் ஏற்கும்படியான பொழுது போக்கு அம்சங்களுடன் உருவாக்கினேன்.
இந்தப் படத்துக்கு கட்டுமஸ்தான உடல்வாகு கொண்ட ஒரு இளைஞன் தேவை. ஆர்யா அப்போது அப்படி இருந்தார். அவரிடம் கதை சொன்ன உடனேயே கடம்பனாக மாறி வந்து நின்றார். சிக்ஸ் பேக் உடம்பு, எதையும் செய்ய தயார் என்கிற மனநிலையோடு வந்து நின்றார். கடம்பனாகவே வாழ்ந்தார். படப்பிடிப்பு முழுக்க காலில் செருப்பு அணியாமல் காடு மேடுகளில் நடித்தார். 500 அடி பள்ளத்தில் குதிக்க வேண்டிய காட்சியில் டூப் ஏற்பாடு செய்தும் அதை மறுத்து துணிந்து நடித்தார். 20 டேக்குள் எடுக்கப்பட்டு 21வது டேக்குதான் ஓகே ஆனது. ஒவ்வொரு முறை அவர் குதிக்கும்போது அவருக்கு எப்படி இருந்ததோ எங்களுக்கு உயிர்போய் திரும்பியது. அடர்ந்த காட்டில் அடை மழையில் படப்பிடிப்பு நடத்தினோம் 105 டிகிரி காய்ச்சலுடன் நடித்தார். இந்த உழைப்புக்காக டெடிகேசனுக்காக கடம்பன், ஆர்யாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. என்கிறார் ராகவன்.