கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
ரஜினிமுருகன், ரெமோ படங்களின் வெற்றிக்குப்பிறகு விஜய்யுடன் பைரவா படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், தற்போது சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிக்கிறார். முன்னதாக, வாலு பட டைரக்டர் விஜயசந்தர் இயக்கி வரும் கெட்ச் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷைதான் முதலில் அணுகினார்கள். ஆனால், கதையைகூட கேட்காமல் இப்போதைக்கு இளவட்ட நடிகர்களுடன் மட்டுமே நடிக்கும் முடிவில் இருக்கிறேன் என்று ஓப்பனாக சொல்லி அந்த படத்தை தவிர்த்து விட்டார் கீர்த்தி சுரேஷ்.
அதேபோல், தற்போது தெலுங்கில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் அவரை, பூரி ஜெகன்னாத் இயக்கும் புதிய படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க கேட்டபோது, அவரது வயதை முன்வைத்து நடிக்க மறுத்து விட்டாராம். ஆனால் அதே படத்தில் இளவட்ட நடிகர் சரண் இருப்பதை டைரக்டர் சொன் னதும், அந்த வேடத்தில் நான் நடிக்கிறேன் என்று கேட்டு வாங்கி நடிக்கிறாராம் கீர்த்தி சுரேஷ்.
இப்படி சொல்லும் கீர்த்தி சுரேஷ்க்கு சீனியர் நடிகர்களுடன் நடிக்க வேண்டு மென்ற ஆசையும் உள்ளதாம். ஆனால் முதல் ரவுண்டிலேயே அவர்களுடன் நடித்தால் ஒருவேளை இளவட்ட நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்காமல் போய் விடும் என்று நினைக்கிறாராம். அதனால், அடுத்த ரவுண்டில் ஜூனியர், சீனியர் என்பதை கருத்தில் கொள்ளாமல், கதாபாத்திரங்களை முன்வைத்து கதைகளை செலக்ட் பண்ணி அனைத்து ஹீரோக்களுடனும் நடிக்கப்போகிறாராம் கீர்த்தி சுரேஷ்.