ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
மகேஷ் பாபுவை வைத்து நேரடி தெலுங்குப்படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அல்லு அர்ஜுன் நடிக்கும் நேரடி தெலுங்குப் படத்தை லிங்குசாமி இயக்கும் முயற்சியில் உள்ளார். இவர்கள் தவிர வேறு பல இயக்குநர்களும் தெலுங்கு ஹீரோக்களை வைத்து நேரடி தெலுங்குப் படங்களை இயக்கி வருகின்றனர்.
இந்த பட்டியலில் விரைவில் மணிரத்னமும் சேர இருக்கிறார். கார்த்தியை வைத்து 'காற்று வெளியிடை' படத்தை இயக்கியுள்ள மணிரத்னம் அடுத்து தெலுங்கு ஹீரோ ராம் சரண் தேஜாவை வைத்து ஒரு நேரடி தெலுங்குப் படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் அர்விந்த் சாமியும் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறாராம்.
'காற்று வெளியிடை' ஏப்ரல் 7-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படம் வெளியானதும் சில மாத ஓய்வுக்குப் பிறகு ராம் சரண் தேஜா ந டிக்கும் படத்தின் வேலைகளை துவங்கவுள்ளாராம் மணிரத்னம். இந்த படம் சம்பந்தமாக அர்விந்த்சாமி, மற்றும் ராம் சரண் தேஜாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி முடித்திருக்கிறாராம் மணிரத்னம்.
காற்று வெளியிடை படம் வெளியான பிறகே இந்தப் படம் சம்பந்தமாக அதிகார்பூர்வ தகவல் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. தெலுங்குப் படங்களை இயக்க தமிழ் இயக்குநர்கள் ஆர்வம் காட்டுவது என்? இங்கே கிடைப்பதைவிட இரண்டு மடங்கு சம்பளம் தெலுங்கில் தருகிறார்களாம். அதனால் தான் தெலுங்குப் படங்களை இயக்க நம்ம ஊர் இயககுநர்கள் ஆர்வம் காட்டுகிறார்களாம்.