‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாலிவுட்டின் பிரபல நடிகை ரவீணா டாண்டன். தமிழில் கமல்ஹாசனுடன் ஆளவந்தான் படத்தில் நடித்தார். முன்பு போன்று சினிமா பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் மனதுக்கு பிடித்த படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ‛மாத்தர்'. இதில், ரவீணா தான் முதன்மை நாயகி, அதனால் ரவீணாவிற்கு திருப்புமுனை தரும் படமாக இது அமையும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இப்பட புரொமோஷன் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ரவீணா, ‛மீண்டும் வந்தார்' என்ற வார்த்தையை சொல்லாதீர்கள் என்றார்.
இதுகுறித்து ரவீணா மேலும் கூறியதாவது... ‛‛என்னுடைய ஆரம்பகாலத்தில், ஆண்டுக்கு 30 படங்களில் நடிக்க வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் இப்போது அப்படியில்லை, ஒருநிலையை அடைந்துவிட்டேன். மாத்தர் படத்திற்கு பிறகு அடுத்த என்ன படத்தில் நடிக்க போகிறேன் என்று கூட யோசிக்கவில்லை. தொடர்ந்து அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறேன். எத்தனைமுறை மீண்டும் வந்தார் என்று வார்த்தையை உபயோகப்படுத்தப்போகிறீர்கள், எனக்கு அந்த வார்த்தையை பயன்படுத்துவது சுத்தமாக பிடிக்கவில்லை'' என்று கூறியுள்ளார்.