ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழகத்தில் நிறைய அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. நடிகர் ரஜினிகாந்த் இப்போதாவது அரசியலுக்கு வரமாட்டாரா என்று அவரது ரசிகர்கள் ஏங்கி கொண்டிருக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் ரஜினி, தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளை அழைத்து பேசி நெடுங்காலமாகிவிட்டது. ஆகையால் இந்த சந்திப்பு ரஜினியின் அரசியல் குறித்த சந்திப்பாக இருக்கலாம் என சொல்லப்பட்டது. ஆனால் ரஜினியின் செய்தி தொடர்பாளரோ.... ரஜினி, தன் ரசிகர்களை சந்திப்பதாக வந்த தகவல் பொய்யானது என்று மறுத்தார்.
இந்நிலையில், சென்னை வந்த மலேசிய பிரதமர் நஜிப் ரஜாக், சென்னையில் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினியிடம், ரசிகர்களை அழைத்து பேச இருப்பது அரசியல் தொடர்பான காரணத்திற்காக என்று கேட்டபோது, அதற்கு பதிலளித்த ரஜினி, ரசிகர்களை சந்தித்து நீண்ட நாட்களாகிவிட்டது. ரசிகர்களை சந்திப்பது அரசியல் பிரவேசத்திற்கான காரணம் என்று கூறுவது பொய்யான தகவல். ரசிகர்களுடன் நான் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்வு ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 16 வரை நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வில் நான் கலந்து கொள்ளவிருக்கிறேன். அதற்காகத்தான் ஏப்ரல் 2-ந் தேதி ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற இருக்கிறது. மற்றபடி எந்த அரசியல் காரணமும் இல்லை'' என்றார்.