'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
முன்பெல்லாம் ஒரு படத்தில் நடிப்பர்கள் பாடவும், ஆடவும் தெரிந்தவர்களாக இருப்பார்கள். அதே போன்று இயக்குனுர்கள் ஒவியம் தெரிந்தவர்களாக இருப்பார்கள். படத்துக்கு தேவயான காட்சியை படமாக வரைந்து வைத்திருப்பார்கள். இதனை ஸ்டோரி போர்ட் என்பார்கள். இப்போது ஓவியம் வரையத் தெரிந்த கலைஞர்கள் மிகவும் குறைவு. இயக்குனர் ஷங்கர், சிம்பு தேவன், வசந்தபாலன் உள்ளிட்ட ஒரு சில இயக்குனர்களே ஸ்டோரி போர்டை பயன்படுத்துகிறார்.
ஆனால் இப்போது ஸ்டோரி போர்டு கலைஞர்கள் புதிய வகையினர் உருவாகி இருக்கிறார்கள். படத்தின் கதையை அவர்களிடம் சொன்னால் படத்தின் காட்சிகளை அவர்கள் வரைந்து தருவார்கள். அதனை கொண்டு காட்சியை படமாக்கலாம். இந்த துறையில் இப்போது முன்னணியில் இருக்கிறவர் விஸ்வநாத் சுந்தரம். இவர்தான் பாகுபலி படத்திற்கும் ரஜினியின் 2.ஓ படத்திற்கும் ஸ்டோரி போர்ட் வரைந்துள்ளார். இது பற்றி அவர் கூறியிருப்பதாவது:
எனக்கு சிறுவயதிலிருந்தே ஓவியத்தில் மிகவும் ஆர்வம். முறைப்படி ஓவியம் கற்றுக் கொண்டேன். ஓவியக் கலையை தொழில்நுட்பத்துடன் பயன்படுத்த வேண்டும் என்பது என் ஆசை. அதற்கான ஒரே வழி சினிமாதான். எனது நண்பர் பாலாஜி மூலமாக விடியும் முன் என்ற படத்தில் முதன் முறையாக பணியாற்றினேன்.
அந்தப் படத்தின் ஓவியங்களை பார்த்த கலை இயக்குனர் சாபுசிரில் பாகுபலி படத்திற்கு என்னை அழைத்துச் சென்றார். படத்தின் கதையை கேட்டு அதற்கேற்ப நான் வரைந்து கொடுத்த ஓவியங்களின் அடிப்படையில்தான் சாபு சிரில் அரங்கம் அமைத்தார். கிராபிக்ஸ் கலைஞர்கள் கிராபிக்ஸ் செய்தார்கள். ஓவியங்களை தேர்வு செய்தது இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலிதான்.
கட்டப்பா பாகுபதியை வாளால் குத்தும் காட்சியை வரையச் சொன்னார். படத்தின் முக்கியமான பகுதி இது. இந்த காட்சிதான் இரண்டாம் பாகத்துக்கு ஆதாரம் என்றார். அப்போதுகூட எனக்கு கட்டப்பா எதுக்காக பாகுபலியை குத்தினார் என்று தெரியாது. முதிலில் இரண்டு ஓவியங்கள் வரைந்தேன். அது அவருக்கு பிடிக்கவில்லை. மூன்றாவதாக வரைந்த ஓவியம்தான் படத்தின் காட்சியானது.
2.ஓ படத்தின் ஹீரோ, வில்லன் ஓவியங்களை வரைந்து கொடுத்திருக்கிறேன். இதுபோன்ற பெரிய படங்களில் மட்டுமல்ல சிறிய படங்களிலும் ஸ்டோரி போர்ட் கலைஞர்கள் பணியாற்ற முடியும். இப்போதுதான் எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. இனி வரும் காலங்களில் ஸ்டோரி போர்ட் கலைஞர்களின் பங்களிப்பு பெரியதாக இருக்கும் என்கிறார். விஸ்வநாத் சுந்தரம்.