பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
“ஒரு மனிதனை நம்பமுடியாத அதிசயம் ஒன்று சந்திக்கும்போது அங்கே வரலாற்றுக்காவியம் பிறக்கிறது” என்கிற டேக்லைனுடன் உருவாகியுள்ளது பிருத்விராஜ் சகோதரர்கள் இணைந்து நடித்துள்ள தியான் படம். இது இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் 12வது படம். நடிகரும் கதாசிரியருமான முரளி கோபி இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளதுடன் முக்கிய கேரக்டரிலும் நடித்துள்ளார்... இந்தப்படத்தை ஜியென் கிருஷ்ணகுமார் என்பவர் இயக்குகிறார்.. இவர் இந்திரஜித்தையும் முரளிகோபியையும் வைத்து ஏற்கனவே காஞ்சி என்கிற ஆக்சன் படத்தை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாற்று பின்னணியில் வட இந்தியாவை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தில் பிருத்விராஜ், அஸ்லான் முகமது என்கிற கேரக்டரிலும் இந்திரஜித், பட்டாபிராமன் என்கிற கேரக்டரிலும் நடித்துள்ளார்கள்.. நேற்று இந்தப்படத்தின் டீசர் வெளியானது. கதை பற்றிய எந்த ஒரு க்ளூவையும் கொடுக்காமல் வட இந்திய பாலைவனங்களின் பின்னணியில் உருவான காட்சிகளை இந்த டீசரில் பார்க்கும்போது இந்தப்படத்தில் ரசிகர்களுக்கு நிறைய ஆச்சர்யங்கள் இருப்பதாகத்தான் தோன்றுகிறது.. இந்தப்படத்தின் டீஸரை பார்த்த பாலிவுட் இயக்குனர் கரன் ஜோஹர், பிருத்விராஜூக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதை ஷேர் செய்துள்ளார். ஈத் பண்டிகை கொண்டாட்டமாக இந்தப்படம் ரிலீசாக இருக்கிறது.