கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 'அங்கமாலி டைரீஸ்' ரசிகர்களிடம் விமர்சகர்களிடம் சம வரவேற்பை பெற்றது ஆச்சர்யமான ஒன்று.. அங்கமாலி என்கிற நகரத்தின் விதவிதமான மனிதர்களை, அவர்களது வாழ்க்கையை, குறிப்பாக அங்கே கொடிகட்டி பறக்கும் பன்றி இறைச்சி வியாபாரத்த, அந்த வியாபாரத்தின் போட்டி காரணமாக உண்டாகும் மோதலை அப்படியே எந்தவித கமர்ஷியல் பூச்சுமின்றி ராவாக படமாக்கியிருந்தார் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி.. இத்தனைக்கும் படத்தில் நடித்த முக்கிய கதாபாத்திரங்கள் 86 பெறும் புதுமுகங்கள் தான்..
அதனால் தான் இந்தப்படம் விமர்சன ரீதியகாவும் நல்ல முயற்சி என பாராட்டப்பட்டது.. இங்கே தமிழ் திரையுலகில் உள்ள நவீன படைப்பாளிகளிடமும் இந்தப்படம் வரவேற்பை பெற்றது.. சில தினங்களுக்கு முன் இந்தப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பாராட்டியிருந்தார்.. இப்போது லேட்டஸ்ட் பாராட்டு இயக்குனர் பா.ரஞ்சித்திடம் இருந்து வெளிப்பட்டுள்ளது.. படக்குழுவினரை பாராட்டியதுடன், படத்தின் பிரதான கதாபாத்திரமாக இடம் பெற்ற பன்றியின் எமோஜிக்களை வைத்து தனது உணர்வுகளையும் நுட்பமாக வெளிப்படுத்தி இருக்கிறார் பா.ரஞ்சித்..