சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா |
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தமிழ்சினிமாவில் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனால் ஒயிலாட்டம் படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் நடிகை சார்மிளா.. அதன்பின் தமிழில் சில படங்களில் நடித்தவர் பின் தனது சொந்த ஊரான மலையாள திரையுலகம் பக்கமே ஒதுங்கினார்.. நன்றாக பீக்கில் இருந்த நேரத்தில் வில்லன் நடிகர் பாபு ஆண்டனியுடன் காதல், அதன்பின் காதல் தோல்வி, பின் மலையாள சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றிய கிஷோர் சத்யாவுடன் திருமணமானது, சினிமாவை ஒதுக்கிவிட்டு ஷார்ஜாவில் செட்டிலானது என அடுத்தடுத்து பரபரப்பான நிகழ்வுகள் இவர் வாழ்க்கையில் அரங்கேறின..
அதன்பின் கிஷோர் சத்யாவை விவாகரத்து செய்துவிட்டு, பின் ராஜேஷ் என்பவரை திருமணம் செய்து சில வருடங்களில் அவரையும் விவாகரத்து செய்து என இன்னும் தலைசுற்ற வைக்கும் விஷயங்கள் இருந்தாலும், அதிலிருந்து மீண்டு இப்போது சில படங்களில் அம்மாவாக அக்காவாக நடித்துவருகிறார்.. சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது சினிமா கேரியர், குடும்ப வாழ்க்கை இரண்டுமே பாழானதற்கு தனது முதல் கணவர் கிஷோர் சத்யா தான் காரணம்.. விக்ரமுடன் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை இவரது கட்டாயத்தால் தான் இழந்தேன்..” என்பது உட்பட பல பகிரங்கமான குற்றசாட்டுக்களை அவர் மீது சுமத்தியுள்ளார் சார்மிளா.