மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தென்னிந்திய நடிகர் சங்கம் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னை, ஹபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் சிறப்பாக நடந்தது. இந்த விழாவில் கமல் மற்றும் ரஜினி ஆகியோர் முதல் கல்லை எடுத்து வைப்பார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் கமல், லண்டன் சென்று திரும்பியதால் சற்று தாமதமாக காலை 11.30 மணியளவில் பங்கேற்றார். அவருக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து கட்டடத்திற்கான கல்லை கமல் எடுத்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், ‛‛பல நாள் கனவு இது. இன்று அனைவரும் ஒன்று கூடி இந்த விழாவை நடத்துவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த செங்கலில் நானும் ஒரு சிமெண்ட்டாக இருந்துள்ளேன் என்று எண்ணும்போது மகிழ்ச்சியாக உள்ளது. நடிகர் சங்க கட்டடம் நிச்சயம் பெரிய கோட்டையாக மாறும்'' என்றார்.