'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் சங்கம் அடிக்கல் நாட்டு விழா சென்னை, ஹபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் சிறப்பாக நடந்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால், 2018-ம் ஆண்டு செப்டம்பரில் இந்த கட்டடம் திறக்கப்படும். உரிய அனுமதி பெற்று தான் இந்த கட்டடத்தை ஆரம்பிக்கிறோம். யாரும் எங்களை தடுக்க முடியாது, மீறி தடுத்தால் ஏறி மிதித்து போய் கொண்டே இருப்போம். நடிகர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் கட்டடம் கட்ட உள்ளோம். நடிகர் சங்கம் சிறப்பாக செயல்படும். இங்கே சாரதா, வாணிஸ்ரீ போன்ற மூத்த நடிகர்கள் எல்லாம் வந்துள்ளனர். நாங்கள் உங்கள் பிள்ளைகள் நிச்சயம் தவறு செய்ய மாட்டோம். ஒரு ரூபாய் கூட முறைகேடு நடக்காது. நடிகர் சங்க கட்டடத்திற்காக நானும், கார்த்தியும் ரூ.10 கோடி நிதியாக கொடுக்க உள்ளோம். கார்த்தி ராஜஸ்தானில் படப்பிடிப்பில் இருக்கிறார், அதனால் வரவில்லை. வீடியோ கான்பரென்ஸ் மூலம் பேசுவார். 11.30 மணிக்கு ரஜினி, கமல் பங்கேற்க உள்ளார்கள் என்றார்.