இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தான் இயக்கி நடித்த காஞ்சனா படத்தில் திருநங்கைகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கதை பண்ணியிருந்தார் ராகவா லாரன்ஸ். இந்த நிலையில், நேற்று முன்தினம் திருநெல்வேலியில் நடைபெற்ற மாற்றத்தை நோக்கி திருநங்கைகள் என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் ராகவா லாரன்ஸ்.
அப்போது அவர் பேசும்போது, திருநங்கைகள் அஷ்டலட்சுமிகள். அதனால்தான் வடஇந்தியாவில் முக்கிய நிகழ்ச்சிகளை அவர்களை வைத்து விளக்கேற்றி தொடங்குகிறார்கள். அதேபோல் தமிழ்நாட்டிலும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நான் எனது படங்களில் நடித்து சம்பாதிப்பதில் அவர்களது பெயரில் ஒரு கணக்குத் தொடங்கி பணம் சேமிக்கப்போகிறேன். அந்த பணத்தைக்கொண்டு அவர்களுக்கு மருத்துவ உதவி செய்யப்போகிறேன். அவர்களுக்கென ஒரு கட்டிடமும் கட்டிக்கொடுப்பேன்.
மேலும், ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்துள்ளேன். ஏழை விவசாயிகளுக்கு உதவி செய்தும் வருகிறேன். அதோடு, திருநங்கைகள் சம்பந்தப்பட்ட கதையில் மீண்டும் நான் படமெடுப்பேன் என்று பேசியுள்ள லாரன்ஸ், திருநங்கைகள் அஷ்ட லட்சுமிகள் என்று அழைக்கப்பட வேண்டும். அதை வலியுறுத்தி நான் போராட்டம் நடத்தப்போகிறேன் என்றும் பேசியுள்ளார்