‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தற்கொலை செய்து கொண்டதாக, வலைதளத்தில் வதந்தி பரப்பியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நகைச்சுவை நடிகர், போலீசில் புகார் அளித்துள்ளார்.சென்னை, விருகம்பாக்கம், நடேசன் நகரைச் சேர்ந்தவர், கார்த்திக்; சினிமாவில், தீப்பெட்டி கணேசன் என்ற பெயரில், நகைச்சுவை காட்சிகளில் நடித்து வருகிறார். ரேணிகுண்டா படம் மூலம் அறிமுகமானார். பின், விஜய், சிம்பு, விஜய்சேதுபதி என, முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து புகழ் பெற்றார். இவர், மார்ச், 29ல் தற்கொலை செய்து கொண்டதாக, சமூக வலைதளம் ஒன்றில் செய்தி வெளியானது. இதனால், கணேசனின் நண்பர்கள், உறவினர்கள், அவரது குடும்பத்தாரிடம் துக்கம் விசாரித்து உள்ளனர். இது குறித்து, தீப்பெட்டி கணேசன், நேற்று, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், என் வளர்ச்சி பிடிக்காத சிலர், நான் தற்கொலை செய்து கொண்டதாக, வதந்தி பரப்பி உள்ளனர். இதனால், என் குடும்பத்தார் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். வதந்தி பரப்பியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூறியுள்ளார். இந்த புகார், மத்திய குற்றப்பிரிவின், சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.