டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தென்னிந்திய சினிமாவில் ஷங்கர் ஒருவர் தான் பிரமாண்டமான படம் எடுக்கும் இயக்குநர்களில் நம்பன் ஒன் இயக்குநராக இருந்தார். பாகுபலி படம் அந்தப்பெருமையை எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு வழங்கிவிட்டது. அது மட்டுமல்ல, பாகுபலி படத்தின் அபரிமிதமான வெற்றி, பாகுபலி-2 படத்தை வேறு ஒரு உயரத்துக்குக் கொண்டு சென்றுவிட்டது.
அதாவது பாகுபலி - 2 படத்தை 3டியில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார் எஸ்.எஸ்.ராஜமெளலி. அதுமட்டுமல்ல, ஐமேக்ஸ் திரையரங்குகளிலும் பாகுபலி- 2 படத்தை வெளியிட உள்ளனர். பாகுபலி- 2 படத்தை பின்பற்றி தான் இயக்கி வரும் 2.0 படத்தையும் உருவாக்கி வருகிறார் ஷங்கர்.
ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷ்ய் குமார் உள்ளிட்ட பலர் நடிக்கும் எந்திரன் இரண்டாம் பாகமான 2.0, கடந்த வருடம் படப்பிடிப்பு துவங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதன் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் நிறைவடைந்ததை அடுத்து, தற்போது இப்படத்தின் இறுதி பணிகளான பின்னணி இசை மற்றும் விஷுவல் எபக்ட்ஸ் (VFX) ஆகியவை மும்மரமாக நடைபெற்று வருகிறது.
தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் 2.0 படத்தை, பாகுபலி-2 படத்தைப் போலவே 3டி தொழில் நுட்பத்திலும் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். அதோடு, ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியிடவும் உள்ளனர்.