ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரு படத்தை முடிக்க போதிய பணம் இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டால், புதிய படத்தை ஆரம்பிப்பதும், அந்தப் படத்துக்கு வாங்கிய பைனான்ஸை வைத்து ஏற்கனவே தொடங்கிய படத்தை முடிப்பதும், இரண்டாவதாக ஆரம்பித்த படத்தை முடிக்க பணம் தேவைப்படும்போது மூன்றாவதாக இன்னொரு படத்தை ஆரம்பிப்பதும் கோடம்பாக்கத்தில் சகஜம்.
சமீகாலமாக கெளதம் மேனனும் இதையே பின்பற்றி வருகிறார். அச்சம் என்பது மடமையடா படத்தை முடிக்க பணம் தேவைப்பட்டபோது, எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை தொடங்கினார். இப்போது எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை முடிக்க பணம் தேவை. எனவே பெல்லி சூப்புலு தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கை ஆரம்பித்தார்.
விஷ்ணு விஷால், தமன்னா நடிக்க படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தை கௌதம் மேனனின் உதவி இயக்குனரான செந்தில் வீராசாமி இயக்குகிறார். இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பெண் ஒன்று கண்டேன் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.