ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
புதுமுகங்கள் நடித்த படங்கள் வெளியாகி ஒரு வாரம் ஓடுவது என்பதே அதிசயமான விஷயம் தான்.. ஆனால் கடந்த மார்ச்-3ஆம் தேதி மலையாளத்தில் வெளியான 'அங்கமாலி' டைரீஸ்' என்கிற படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடம் நன்கு வரவேற்பை பெற்றதுடன் மூன்றாவது வாரத்தை கடந்தும் பல தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் அடுத்தடுத்து மம்முட்டி, திலீப், மோகன்லால் படங்கள் வெளியாவதை முன்னிட்டு இந்தப்படத்தை சில தியேட்டர்களில் இருந்து தூக்கியும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் என்றால் காட்சிகள் எண்ணிக்கை குறைப்பும் செய்து வருகிறார்கள்.
அப்படித்தான் திருச்சூரில் உள்ள கிரிஜா தியேட்டரிலும் நன்றாக ஓடிக்கொண்டிருந்த 'அங்கமாலி டைரீஸ்' படத்தை நிறுத்தப்போவதாக தகவல் கிடைத்ததும் ரசிகர்கள் கலாட்டா பண்ண ஆரம்பித்துவிட்டார்களாம். இதனால் கடுப்பான தியேட்டர் நிர்வாகம் கேட்டை இழுத்து மூடி காட்சிகளை ரத்து செய்தது. மேலும் படத்திற்கு கூட்டமே வரவில்லை என்றும் கடந்த சில நாட்களாக படம் சம்பந்தப்பட்டவர்கள் அங்கங்கே கட்டட பணிகளுக்காக வந்து தங்கியிருக்கும் பீகாரிகளையும் பெங்காலிகளையும் டிக்கெட் கொடுத்து படம் பார்க்க சொல்வதாகவும் இதன்மூலம் தங்களது படத்துக்கு கூட்டம் அதிகமாக வந்துகொண்டிருப்பது போல் சித்தரிக்க முயற்சிப்பதாகவும் புகார் கூறியுள்ளனர்..
ஆனால் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் விஜய் பாபுவோ, “எங்களது படம் தானாகாவே நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டு இருக்கும்போது, நாங்கள் எதற்காக ஆட்களை கூட்டி வந்து படம் பார்க்க வைக்கும் கேவலமான வேலையை செய்ய வேண்டும். அடுத்தடுத்து பெரிய படங்கள் வருவதால் அதற்காகவே நன்றாக ஓடிக்கொண்டு இருக்கும் எங்கள் படத்தை தூக்குவது எந்த விதத்தில் நியாயம்” என கொந்தளிக்கிறார். இந்த விஜய்பாபுதான் விஜய்யின் 'தெறி' படத்தை கேரளாவில் வாங்கி வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.