இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழ்த் திரையுலகத்தில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக கருதப்படுபவர் செல்வராகவன். அவர் இயக்கத்தில் வெளிவந்த காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி ஆகிய படங்கள் அவருடைய திறமையை வெளிப்படுத்திய வெற்றிப் படங்கள். அவரது இயக்கத்தில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை ஆகிய படங்கள் வசூல் ரீதியாக தோல்விப் படங்கள் என்றாலும் செல்வராகவன் கொடுத்த வெற்றிப் படங்களை விட இந்தத் தோல்விப் படங்களைப் பாராட்டாதவர்களே இல்லை எனலாம்.
இரண்டு படங்களுமே தமிழ் சினிமாவில் முக்கியமான படங்கள்தான். இரண்டு படங்களையும் அவர் கொடுத்திருந்த விதம் அப்போது விமர்சிக்கப்பட்டாலும், இப்போது ரசிகர்களிடம் நல்ல படங்கள் என்ற வரவேற்பைப் பெற்றுள்ளன.
கடந்த இரண்டு வருடங்களாக எந்தப் படங்களையும் இயக்காமல் இருந்த செல்வராகவன் நெஞ்சம் மறப்பதில்லை படத்தை இயக்கி முடித்திருக்கிறார். விரைவில் இந்தப் படம் வெளிவர உள்ளது. தற்போது சந்தானம் நாயகனாக நடிக்கும் மன்னவன் வந்தானடி படத்தை இயக்கி வருகிறார்.
ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்திற்கான கதையை இரண்டு வருடங்கள் படம் எதையும் இயக்காமல் இருந்த போது எழுதி முடித்துவிட்டேன். ஆனால், இப்போது வேறு பணிகள் இருப்பதால் தற்போதைக்கு அந்தப் படங்களை இயக்க முடியாது என சொல்லியிருக்கிறார்.
இருந்தாலும் எதிர்காலத்தில் ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை படங்களின் இரண்டாம் பாகங்களை செல்வராகவனிடமிருந்து எதிர்பார்க்கலாம்.