பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தென்னிந்திய நடிகர் சங்கதிற்கு புதிய கட்டடிடம் கட்டப்பட இருக்கிறது. பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அனுமதி கிடைத்ததை தொடர்ந்து நாளை காலை இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும், பூமி பூஜையும் நடக்க இருக்கிறது. ஆனால் "நடிகர் சங்க கட்டிடத்திற்கு அடிக்கல்நாட்டு விழாவும், பூமி பூஜையும் ஏற்கெனவே முடிந்து விட்டது. இப்போது நடப்பது தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான நாடகம்" என்று கலைப்புலி தாணு குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
நடிகர் சங்கதிற்கு விஷால் போட்யிடும்போது ஒரு வருடத்திற்குள் நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்வேன் என்றார் ஆனால் ஒரு வருடம் ஆகியும் அவரால் முடியவில்லை. இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறார். சொன்னபடி கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிவிட்டேன் என்று கூறி தயாரிப்பாளர்களின் வாக்குகளை பெற அவர் நடத்தும் நாடகம் இது.
கடந்த ஆண்டு மார்ச் 4ந் தேதி நடிகர் நாசருக்கும், ஜே.கே.ரித்தீசுக்கும் பிறந்த நாள், அதையொட்டி அன்றைய தினமே நடிகர் சங்க கட்டித்திற்கு அடிக்கல் நாட்டு விழாவும், பூமி பூஜையும் நடத்தப்பட்டு விட்டது. இப்போது மீண்டும் ஒரு விழாவை நடத்தி நடிகர்களையும், தயாரிப்பாளர்களையும் ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்றார்.
இதற்கிடையில் நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டுவிழாவிற்கு அனைவரும் வரவேண்டும் என்ற அதன் தலைவர் நாசர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
தென்னிந்திய நடிகர் சங்கம் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா சென்னை,தியாகராய நகர், அபிபுல்ல சாலையிலுள்ள நடிகர் சங்க வளாகத்தில் வருகிற மார்ச் 31-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இவ்விழாவில் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் விருந்தினராக வருகை தந்து வாழ்த்தி ஆசீர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்விழாவில் பிரபல திரை நட்சத்திரங்கள், மூத்த நடிகர் நடிகைகள், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களாக உள்ள அனைத்து மாவட்ட நாடக நடிகர் நடிகைகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.