'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
மாத்தியோசி, குகன், கோட்டி உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்தவர் குரு கல்யாண். தற்போது இவர் இணையதளத்தில் குரு கல்யாண் மியூசிக் என்ற சேனலை தொடங்கி தனிப் பாடல்களை வெளியிட்டு வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக வீரத்தமிழன் என்ற பாடலை வெளியிட்டார். தற்போது டில்லியில் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிவரும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் விவசாயிகள் என்ற பாடலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து குரு கல்யாண் கூறியதாவது:
டில்லியில் நடந்துவரும் விவசாயிகள் அறப்போராட்டத்தை ஆதரித்தும், இயற்கை நம்மை கைவிடாது என்று வலியுறுத்தியும் "விவசாயிகள்" எனும் பாடலை வெளியிட்டுள்ளேன். இப்பாடலுக்கு "உமா ஷங்கர் எனும் புதுமுக இயக்குனர் காட்சிகளை இயக்கி உள்ளார்., கவிஞர் பழநிபாரதி பாடல் எழுதியுள்ளார். உமா ஷங்கருடன் இணைந்து "ஸ்ரீ சாயி பிலிம்ஸ் எனும் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் விரைவில் பணியாற்ற உள்ளேன் என்றார் குரு கல்யாண்.