நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
இயக்குனர் விஜய்யுடனான திருமண முறிவிற்கு பின்னர் நடிகை அமலா பால் தீவிரமாக பட வேட்டை நடத்தி வருகின்றார். அதன்பலனாக சில தமிழ்பட வாய்ப்புகளை கைப்பற்றியுள்ள அமலாவிற்கு தெலுங்கு தேசத்திலிருந்தும் வாய்ப்பு வந்துள்ளது. பூரி ஜெகன்நாத் இயக்கவிருக்கும் படத்தில் பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கின்றார். மூன்று நாயகிகள் நடிக்கவிருக்கும் இப்படத்தில் மும்பையைச் சேர்ந்த முஸ்கான் நாயகியாக நடிப்பதாக பூரி ஜெகன்நாத் அறிவித்தார். முதன்மை நாயகியாக நடிகை அமலா பால் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பூரி ஜெகன்நாத் இயக்கிய “இட்டராம்மவிலதொ” படத்தில் நாயகியாக நடித்த அமலா பால் மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்றதாம். பெரிய பட்ஜெட் படம் என்பதாலும், டோலிவுட்டின் முன்ணணி நடிகரான பாலகிருஷ்ணாவின் 101வது திரைப்படம் என்பதாலும் இப்படத்தில் நடிக்க அமலாபாலும் சம்மதம் தெரிவித்துள்ளாராம். மூன்றாவது நாயகியாக இயக்குனர் பூரி ஜெகன்நாத்தின் நெருங்கிய தோழி சார்மி நடிக்கலாம் என கூறப்படுகின்றது.