'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷாலை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் தனித்தனியாக போட்டி போட்ட மூன்று அணியினர் இப்போது ஓரணியாக இணைந்துள்ளனர்.
தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற ஏப்., 2-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் விஷால், ராதாகிருஷ்ணன், டி.சிவா, கலைப்புலி ஜி.சேகரன் மற்றும் கேயார் என ஐந்து பேர் தலைமையிலான அணியினர் களம் இறங்கினர். இதில் ஏற்கனவே தாணுவின் வழிகாட்டுதலில் செயல்படும் டி.சிவா அணி, ராதாகிருஷ்ணன் அணியில் இணைந்து ஓரணியாக மாறினார். இதற்கான நிகழ்ச்சி கடந்தவாரம் நிகழ்ந்தது. அப்போது பேசிய தாணு, விஷாலை கடுமையாக தாக்கி பேசினார். அதோடு தகுதியற்ற விஷால் இந்த பதவிக்கு வரக்கூடாது, அவரை தோற்கடிக்க கேயார், ஜி.சேகரன் ஆகியோரும் தங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
இந்நிலையில் கலைப்புலி ஜி.சேகரன் அணியினர், இன்று(மார்ச் 29ம் தேதி) ராதா கிருஷ்ணனுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதற்கான நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது தாணு முன்னிலையில் ராதாகிருஷ்ணனுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தார் ஜி.சேகரன்.
இதன்மூலம், விஷாலை தோற்கடிக்க மூவர் அணி, ஓரணியாக இணைந்துள்ளனர். இதில் யார் வெல்லபோகிறார்கள் என்று ஏப்.,2-ம் தேதி தெரிந்துவிடும்.