'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமலா பால் மற்றும் பலர் நடிக்கும் 'வட சென்னை' படப்பிடிப்பு கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது. முதல் கட்டப் படப்பிடிப்பை ஆரம்பித்து பரபரப்பாக நடத்தினார்கள். ஆனால், அதன் பின் என்ன நடந்ததோ தெரியவில்லை, அந்தப் படத்தை அப்படியே நிறுத்திவிட்டு, 'பவர் பாண்டி' படத்தை இயக்குவதற்கும், 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் நடிப்பதற்கும் தனுஷ் போய்விட்டார்.
'பவர் பாண்டி' படம் ஏப்ரல் 14ல் ரிலீசாக உள்ளது. 'வேலையில்லா பட்டதாரி 2' படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது. 'வட சென்னை' படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு மார்ச் முதல் ஆரம்பமாகும் என ஜனவரி மாதம் வெற்றிமாறன் அறிவித்திருந்தார். ஆனால், அவர் சொன்னபடி படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை.
இப்போது, படப்பிடிப்பு பற்றிய புதிய தகவல் கிடைத்துள்ளது. 'பவர் பாண்டி' படம் வெளியீட்டிற்குப் பின் ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் 'வட சென்னை' படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பிக்க உள்ளார்களாம். தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து அடுத்த வருடத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். மூன்று பாகமாக வெளிவர உள்ள 'வட சென்னை' படத்தின் முதல் பாகப் படப்பிடிப்பை முடித்த பிறகே தனுஷ், அடுத்த படத்தில் நடிக்கப் போவார் என்கிறார்கள்.
இதனிடையே, 'வட சென்னை' படத்தில் சிறப்புக் கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதாகச் சொல்லப்பட்ட விஜய் சேதுபதி, படத்திலிருந்து விலகி விட்டாராம்.