Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஸ்வரூபத்தால் ரூ.60 கோடி நஷ்டம் - தமிழக அரசை குற்றம் சாட்டும் கமல்

29 மார், 2017 - 17:38 IST
எழுத்தின் அளவு:
Rs.60-crore-loss-in-Vishwaroopam---Kamal-blames-TN-Govt.,

விஸ்வரூபம் படத்தை அப்போதைய அரசு தடை செய்ததால் தனக்கு ரூ.60 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன், சினிமாவில் தன் படம் சம்பந்தமாக எவ்வளவோ பிரச்னைகளை சந்தித்து இருக்கிறார். அதில் முக்கியமானது விஸ்வரூபம். இப்படத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக கூறி அப்போது பெரும் பிரச்னை எழுந்தது. இதனால் இப்படத்தை ரிலீஸ் செய்ய அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக., அரசு தடை விதித்தது. பின்னர் பல தடைகளை தாண்டி அந்தப்படத்தை ரிலீஸ் செய்தார் கமல். இந்நிலையில் விஸ்வரூபம் படம் தொடர்பாக கமல், தற்போது, அப்போதைய தமிழக அரசு மீது பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது...


‛‛விஸ்வரூபம் படம் தடை செய்யப்பட்டது. பின்னர் சட்டப்பூர்வமாக அந்த தடை நீக்கப்பட்டது. இருந்தாலும் அப்போதைய அரசு படத்திற்கு மீண்டும் தடை விதித்தது. மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த தடை நீக்கப்பட்டது. விஸ்வரூபம் படத்திற்காக எனது ஒட்டுமொத்த சொத்துக்களையும் அடமானம் வைத்தேன், நான் அவமானப்படுத்தப்பட்டேன், இன்னும் சொல்லப்போனால் என்னை அழிக்கும் எண்ணம் கூட இருந்தது.


விஸ்வரூபம் படத்திற்கு எழுந்த தடையால் எனக்கு ரூ.60 கோடி நஷ்டம் ஏற்பட்டது. ஊழலால் நாடு மூழ்கி கிடக்கிறது, அதனால் எதையும் சிறிதாக எடுத்து கொள்வதுடன் மறக்ககூடியதாகவும் உள்ளது. மறதி ஒரு தேசிய வியாதி. நான் எதையும் மறக்க மாட்டேன். என்னுடைய வருமானத்தை மூடி மறைக்காமல், நேர்மையான முறையில் வரி கட்டும் குடிமகன் நான். அப்படிப்பட்ட எனக்கு இது மிகப்பெரிய இழப்பு தான். பொதுமக்களுக்கு நன்றி, நான் இன்னும் உலாவி கொண்டிருக்கிறேன். அடுத்தப்படியாக விஸ்வரூபம்-2 பாகம் வெளியாக உள்ளது, இதற்கு எந்த பிரச்னையும் வராது என்று நம்புகிறேன்.


இவ்வாறு கமல் கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in