'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'குட்டிப்புலி' படத்தை தொடர்ந்து இயக்குநர் முத்தையாவும், சசிகுமாரும் மீண்டும் இணைந்தது தெரிந்த விஷயம்தான். 'கொடிவீரன்' எனப் பெயரிட்டுள்ள அந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கி மதுரை, மேலூர் மற்றும் அதை சுற்றியுள்ள ஏரியாக்களில் நடைபெறுகிறது. இந்த படத்தில் ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கிறார்.
முந்தைய படமான பலே வெள்ளையத்தேவா படத்தைவிட சற்று பெரிய பட்ஜெட்டில் இந்தப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார் சசிகுமார். கொடி வீரன் படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் அர்ஜுனிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். கதையைக் கேட்ட அர்ஜுன் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டநிலையில், அந்த தகவல் வெளியே பரவியது.
வில்லனாக நடிக்கும் தகவல் வெளியே தெரிய வந்ததும் பலரும் அர்ஜுனுக்கு போன் செய்து கேட்க, அவருக்கு தர்மசங்கடமாகிவிட்டது. எனவே கொடிவீரன் படத்தில் வில்லனாக நடிக்கும் முடிவை மாற்றிக் கொண்டுவிட்டார். அதன் காரணமாகவே வில்லனாக நடிக்கவில்லை என்று தற்போது நடிகர் அர்ஜுன் மறுத்துள்ளார்.
தற்போது அர்ஜுன் ஒரு கன்னடப் படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படம் 'நிபுணன்' என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் வில்லனாக நடித்தால் நிபுணன் படத்தை ரிலீஸ் செய்யும்போது பிரச்சனை வரும் என்பதால்தான் கொடி வீரன் படத்தில் நடிக்கவில்லையாம்.