பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது எந்த ஒரு திரையுலகிலும் நடிகர், நடிகைகளுக்கு இடையே காதல் என்று செய்திகள் வெளிவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் முதலிலேயே அதை மறுத்துவிடுவார்கள். அதன் பின் சில வருடங்கள் கழித்து அந்த செய்திகளை உண்மையாக்கும் விதத்தில் திருமணம் செய்து கொள்வார்கள். அதனாலேயே, எந்த ஒரு காதல் கிசுகிசுக்கள் வந்தாலும் ரசிகர்களும் நம்பத் தொடங்கி விட்டார்கள்.
தமிழ்த் திரையுலகில் தற்போதைய காதல் கிசுகிசு ஜோடி என்றால் ஜெய் - அஞ்சலி மட்டுமே. திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள் என கடந்த சில மாதங்களாகவே கிசுகிசுக்கள் பரவி வருகிறது. வழக்கம் போலவே இருவரும் அதை மறுத்து வருகிறார்கள்.
இருந்தாலும் டோலிவுட் வட்டாரங்களில் இருவரது காதலும் உண்மைதான் என்றும் இருவரும் அடுத்த ஆண்டில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பேச்சு எழுந்துள்ளது. அஞ்சலி அவருடைய வீட்டாரிடம் இது பற்றித் தெரிவித்து அனுமதியும் வாங்கிவிட்டாராம். ஜெய் இந்த ஆண்டே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்ததாகவும், அஞ்சலிதான் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என சொன்னதாகவும் சொல்கிறார்கள்.
ஜெய் முஸ்லிம் மதத்தைத் தழுவி சில ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், அஞ்சலி இந்து முறைப்படிதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லி வருகிறாராம். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சலி 'கற்றது தமிழ்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 'அங்காடித் தெரு' படம் அவருக்கு திருப்புமுனைப் படமாக அமைந்தது. தொடர்ந்து “மங்காத்தா, எங்கேயும் எப்போதும், தம்பி வெட்டோத்தி சுந்தரம், அரவான், கலகலப்பு, வத்திக்குச்சி, சேட்டை, சகலகலா வல்லவன், மாப்ள சிங்கம், இறைவி” ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது 'தரமணி, காண்பது பொய், பேரன்பு, பலூன்' ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.