தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள சினிமா முன்னணி நடிகர்களுக்கு இணையாக சுமார் 200 தியேட்டர்களில் படம் ரிலீஸாகும் அளவுக்கு கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள்.. இங்கே தமிழ்நாட்டில் விஜய் ரசிகர்கள் வழக்கம்போல அஜித் ரசிகர்களுடன் மல்லுக்கட்டிக்கொண்டு இருக்க, கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்களோ ஆக்கபூர்வமான பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு ஆச்சர்யப்படுத்தி வருகின்றனர்.. சமீபகாலமாக பெண்கள் மட்டுமல்லாமல் பிஞ்சு குழந்தைளின் பாதுகாப்பு கூட கேள்விக்குறியாகி வரும் நிலையில் அவர்களுக்கான பாதுகாப்பை வலியுறுத்தி விஜய் ரசிகர்கள் கேரளாவில் கொட்டாரக்கரா பகுதியில் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்..
வழக்கமாக இங்கே விஜய் ரசிகர்கள் ஏதாவது நற்பணி என இறங்கினால், அதை கவுன்சிலர் ரேஞ்சில் இருக்கும் ஆளுங்கட்சிக்காரர் வரைக்கும் எதிர்க்கவே செய்வார்கள்.. ஆனால் கேரளாவில் விஜய் ரசிகர்களின் இந்த நல்ல முயற்சிக்கு கொட்டாரக்கரா முனிசிபல் துணை சேர்மன் ஆதரவு தெரிவித்து பேரணியை துவக்கி வைத்ததோடு அவரும் இதில் கலந்துகொண்டாராம்.. விஜய்யின் பெண் ரசிகைகளும் திரளாக இந்த பேரணியில் கலந்துகொண்டது பலரையும் ஆச்சர்யப்படுத்தியது.
20 வருடம் கழித்து இணைந்த 'இருவர்'..!
நடிகர் பிரகாஷ்ராஜை பொறுத்தவரை மலையாள படங்களில் நடிக்க கூடாது என கங்கணம் கட்டிக்கொள்ளவெல்லாம் இல்லை.. நல்ல வாய்ப்பு தேடிவந்தால் நடிக்க தயாராகத்தான் இருக்கிறார்.. ஆனால் 2010ல் பிருத்விராஜுடன் நடித்த 'அன்வர்' படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் இடைவெளி விட்டுவிட்டது அவரது டைட் ஷெட்யூல் காரணமாகத்தான். இப்போது மீண்டும் ஜெயராமுடன் இணைந்து 'அச்சாயன்ஸ்' என்கிற மலையாள படத்தில் நடித்து வருகிறார் பிரகாஷ்ராஜ்..
இருந்தாலும் மலையாள ரசிகர்களை பொறுத்தவரை, எல்லா மொழி முன்னணி ஹீரோக்களுடனும் வில்லனாக நடித்த பிரகாஷ்ராஜ் தங்களது சூப்பர்ஸ்டார் மோகன்லாலுடன் மலையாளத்தில் நேரடியாக ஒரு படத்தில் நடிக்க மாட்டாரா என்கிற ஆர்வம் இருக்கவே செய்கிறது.. இத்தனைக்கும் 20 வருடங்களுக்கு முன் மணிரத்னம் இயக்கத்தில் 'இருவர்' படத்தில் மோகன்லால் தமிழில் அறிமுகமானபோது அவருடன் முக்கியமான வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார் தான்..
ஆனால் என்ன இருந்தாலும் மலையாளத்தில் இருவரும் இணைந்து நடித்தால் அது ஸ்பெஷல் இல்லையா..? அந்தவகையில் மோகன்லால் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் 'ஒடியோன்' என்கிற படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் பிரகாஷ்ராஜ். விளம்பரப்படங்களை இயக்கிய அனுபவம் வாய்ந்த ஸ்ரீகுமார் என்பவர் இயக்கும் இந்தப்படத்தை மோகன்லாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஆசீர்வாத் சினிமாஸ் தான் தயாரிக்கிறது.