ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வாரிசு நடிகர்களில் வேகமாக வளர்ந்து வந்த அதர்வாவை 'கணிதன்' படத்துக்குப் பிறகு காணவில்லை. ஆனால், ஒரே நேரத்தில் 5 படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் எனற தகவல் மட்டும் அதர்வா தரப்பில் சொல்லப்படுகிறது.
செம போத ஆகாத, ருக்குமணி வண்டி வருது, ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், இமைக்கா நொடிகள், ஒத்தைக்கு ஒத்த என ஐந்து படங்கள் அதர்வாவின் கைவசம் இருக்கிறதாம். இவற்றில் செம போத ஆகாத அதர்வாவின் சொந்தப்படம்.
அதர்வா நடித்து வரும் ஐந்து படங்களும் ஒவ்வொரு நிலையில் முடிந்தும் முடியாமலும் இருக்கின்றன. இவற்றில் 'செம போத ஆகாத' படம்தான் முதலில் வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் டீஸர் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது.
விரைவில் இப்படத்தின் பாடல்களும் வெளியாக உள்ளநிலையில் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. 'பாகுபலி 2' படத்தின் சென்னை, செங்கல்பட்டு வெளியீட்டு உரிமையையும் இந்நிறுவனமே வாங்கியுள்ளது.